சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்ற இருவர் கைது

78பார்த்தது
சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்ற இருவர் கைது
மதுரை மாவட்டம், அலங்காநல்லுார் அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கள்வேலிப்பட்டி பகுதியில் அலங்காநல்லூர் போலீசார் நேற்று (செப்.15) காலை ரோந்து பணியில் ஈடுபட்ட போது அப்பகுதியில் புதிய பாலம் கட்டுமானம் அருகே மது விற்பனை நடப்பதாக ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

உடனடியாக அங்கு சென்று போலீசார் பார்த்தபோது அங்கு மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த அ.கோவில்பட்டியை சேர்ந்த ராமர் (48, ) மற்றும் சந்தானம் ஆகியோரை (48) போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 77 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி