மன வருத்தத்தில் விவசாயி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

70பார்த்தது
மன வருத்தத்தில் விவசாயி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே விவசாயி தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த மொக்கையன் (50) என்ற விவசாயி தனக்கு சொந்தமான மாந்தோப்பில் தங்கி விவசாய வேலையை செய்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவதினத்தன்று மாந்தோப்பில் ஒரு மரத்தில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி