மன அழுத்தம் காரணமாக பிளஸ்டூ மாணவன் தற்கொலை

81பார்த்தது
மன அழுத்தம் காரணமாக பிளஸ்டூ மாணவன் தற்கொலை
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம், திருவள்ளுவர் கார்டன் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் கம்ப்யூட்டர் மென்பொருள் என்ஜினீயராக உள்ளார். இவரது மகன் லோகித் ( வயது 17) என்பவர் மதுரையை அடுத்த கோவில் பாப்பாக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி யில் பிளஸ்-2 வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் மாணவன் லோகித் சரியாகப் படிக்க முடியவில்லை என்று கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று(செப்.15) இரவு சாப்பிட்டுவிட்டு லோகித் தூங்க சென்றவர் இரவு 11 மணி அளவில் தனது வீட்டில் உள்ள தனி அறைக்கு சென்று நைலான் கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதனை பார்த்த அவரது பெற்றோர் லோகித்தை மீட்டு உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த அலங்காநல்லூர் போலீசார் மாணவரின் தற்கொலைக்கான காரணம் ஏதும் உள்ளதா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி