ஸ்ரீராம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஸ்ரீராம் நிஃப்டி 1டி ரேட் லிக்விட் ஈடிஎஃப் (குரோத்) ஃபண்ட் திட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய ஃபண்டில் ஜூலை 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்வதற்கு குறைந்தபட்ச விண்ணப்பத் தொகை ரூ.1,000 ஆகும். இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகை கடன் பத்திரங்கள், அரசின் பாண்டுகள், அதிக ரிஸ்க் இல்லாத முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.