அதிக மன அழுத்தத்தால், சருமம் தன் அழகை இழக்கும் தெரியுமா? ஆம், அதுதான் உண்மை. 20 வயதிற்கு பிறகு அதிக மன அழுத்தம் ஏற்படலாம். இந்த மன அழுத்தம் உங்கள் தோல் சுருக்கத்திற்கு முக்கிய காரணமாகும். அதுமட்டுமின்றி நாள்பட்ட மன அழுத்தம் உடலை பல்வேறு வழிகளில் பாதிக்கிறது. குறிப்பாக ரத்த ஓட்டத்தை பாதித்து, ஆக்சிஜன் குறைபாட்டை ஏற்படுத்தும். இதனால் கருவளையங்கள், கரும்புள்ளிகள் சருமத்தில் ஏற்படும். இது இளவயதில் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும்.