குளிர் பிரதேசங்களுக்கு படையெடுக்கும் தலைவர்கள்

79பார்த்தது
குளிர் பிரதேசங்களுக்கு படையெடுக்கும் தலைவர்கள்
தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஓய்வுக்காக குளிர் பிரதேசங்களை நோக்கி படையெடுக்க உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி, வால்பாறை, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, கொல்லிமலை உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் உள்ள ஏராளமான சுற்றுலா தங்குமிடங்கள் இப்போதே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. மேலும் சில தலைவர்கள் வட மாநிலங்களில் உள்ள குளிர் பிரதேசங்களுக்கு கிளம்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி