இயக்குநர் சேரனின் மகள் நிவேதா - சுரேஷ் ஆதித்யா திருமணம் சென்னையில் கடந்த மாதம் நடைபெற்றது. இந்தத் திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுக்க, இயக்குநர் பாரதிராஜா, சீமான் , சமுத்திரக்கனி ஆகியோர் சீர் செய்து நடத்திக் கொடுத்தனர். சேரனின் மகள் விருப்பப்படி இந்தத் திருமணத்தை மிக எளிமையான முறையில் நடத்தினார் சேரன். ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தது சேரன் குடும்பத்தாரை நெகிழ்ச்சியடைய வைத்ததை மறக்கவே முடியாது.