இளம் பெண்ணிடம் அத்துமீறிய உணவு டெலிவரி ஊழியர் கைது!

69பார்த்தது
இளம் பெண்ணிடம் அத்துமீறிய உணவு டெலிவரி ஊழியர் கைது!
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், உணவு டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயது இளம் பெண் ஆர்டர் செய்த உணவை, டெலிவரி எடுத்து வந்த எருக்கஞ்சேரியை சேர்ந்த ரவிக்குமார் (48) அனுமதியின்றி வீட்டிற்குள் நுழைந்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் ரவிக்குமாரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி