18 வயது நிரம்பாத சிறார்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.) ரத்து செய்யும் விதிமுறை ஜூன் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. மேலும், பிடிபடும் சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதமும், 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. 18 வயது நிரம்பாத சிறார்கள் வாகனங்களை இயக்கி விபத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க தமிழ்நாடு போக்குவரத்துத்துறை இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.