2010ல் வெளியான "ஜக்குபாய்" திரைப்படம் தோல்வியடைந்ததற்கான காரணத்தை அதன் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தற்போது வெளிப்படுத்தியுள்ளார். “அந்த திரைப்படத்தை சிறப்பாக தான் உருவாக்கினேன். ஆனால் படம் வெளியாவதற்கு 2 நாளுக்கு முன்பு சரத்குமார் அணியில் இருந்த ஒரு நபர் படத்தை இணையத்தில் வெளியிட்டதால் பலரும் இணையம் மூலம் பார்த்துவிட்டனர். இதை அப்படியே வெளியிட முடியாது என்று அதில் சில விஷயங்களை கட் செய்து மாற்றியதில் கதையில் பல விஷயம் மாறிவிட்டது” என்றார்.