பர்கூர்: திருஆதி திரிபுரசுந்தரி கோவிலில் பிரதோஷ வழிபாடு.

74பார்த்தது
பர்கூர்: திருஆதி திரிபுரசுந்தரி கோவிலில் பிரதோஷ வழிபாடு.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பூசிநாயக்கனூர் ஸ்ரீபாலஷேத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள திருஆதி திரிபுரசுந்தரி மகா சன்னிதான பேராலய பீடத்தில் நேற்று மாலை பிரதோஷ வழிபாடு நடந்தது. இதனைத் தொடர்ந்து ரிஷப வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட சிவன் அம்மனுடன் பல்லக்கில் ஊர்வலமாக கோவில் வளாகத்தில் வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி