கிருஷ்ணகிரி: தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி.

60பார்த்தது
கிருஷ்ணகிரி 09-பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை 04. 06. 2024 அன்று கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தபால் வாக்குகள் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சியை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு, இன்று 28. 05. 2024 துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைக்குறள், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் டி. சினேகா இ. ஆ. ப. , மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (நிலம்) சுந்தர்ராஜ், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பெ. ச. லெனின் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி