கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே 17வயது சிறுமி, +2 படித்துள்ளார். இந்த நிலையில் இவருக்கும் இதேபகுதியை சேர்ந்த அன்பு (24) என்பவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாதேப்பட்டி அருகே பெருமாள் கோவிலில் திருமணம் நடைபெற்றது. இந்த குழந்தை திருமணம் குறித்து தகவல் அறிந்த வேப்பனப்பள்ளி வட்டார குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் முனியம்மாள், இதுகுறித்து கிருஷ்ண கிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், அன்பு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.