கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இருந்து கல்லாவி பிரிவு சாலை பகுதியில் மினி வாகனத்தில் 2 நபர்கள் 30 முட்டைகள் அடங்கிய ஒரு அட்டை ரூ. 100க்கு விற்பனை செய்தனர்.
இதை சமூக ஆர்வலர் ஒருவர், முட்டையில் அரசு முத்திரை இருப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அங்கு வந்த போலீசார் முட்டைகளை பறிமுதல் செய்து விசாரித்ததில், பள்ளிகளுக்கு அனுப்பப்படும் மூட்டைகளில் தரம் குறைவு என தள்ளுபடி செய்யப்படுவதை குறைந்த விலைக்கு வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.