ஆசிரியை அடித்ததில் மாணவி படுகாயம்..

60பார்த்தது
ஆசிரியை அடித்ததில் மாணவி படுகாயம்..
கிருஷ்ணகிரி மாவட்டம் எஸ் குருபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி பேலகொண்டப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்கு சென்ற போது மாணவரிடம் ஆங்கில ஆசிரியை பாடம் சம்பந்தமாக கேள்விகளை கேட்டுள்ளார் அவருக்கு பதில் தெரியாததால் அவரை குச்சியால் ஆசிரியை அடித்துள்ளார் இதில் வலது கையில் வீக்கமும் இடது கையில் காயமும் ஏற்பட்டதால் மாணவி அவர் பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்லாமல் பள்ளியிலேயே அமர்ந்திருக்கிறார். இதனால் பள்ளியில் இருந்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாணவி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி