ஓசூரில் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் எம். பி.

61பார்த்தது
ஓசூரில் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் எம். பி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உழவர் சந்தை அருகே காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவர் சாதிக் கான் தலைமை தாங்கினார். இதில், கோபிநாத் எம். பி கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி வைத்து ராஜீவ் காந்தி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகளை வழங்கினார். இதில் காகிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி