தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

576பார்த்தது
ஓசூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 16 குறிஞ்சி நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் வாழும் மக்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

கடந்த 4 மாதங்களாக இந்த பகுதியில் வாழும் பொது மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இங்குள்ள மக்கள் இதுகுறித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் குடிநீர் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, குடிநீர் தேவையை போக்க பொதுமக்கள் விலை கொடுத்து லாரிகளில் குடிநீரை பெற்று தேவையை பூர்த்தி செய்தனர்.

இந்த நிலையில் இன்று குறிஞ்சி நகர் பொதுமக்கள் ஓசூர் பாகலூர் வீட்டு வசதி வாரிய அலுவலகம் முன்பு குடிநீர் வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் முறையாக குடிநீர் வழங்க வேண்டும், குடிநீர் வழங்காத தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி