பெண் குழந்தை பிறந்ததால் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் தம்பதி

62பார்த்தது
ஓசூரை சேர்ந்த கார்த்திக் சீனிவாசன் - வின்சி சோபியா தம்பதியினருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு குழந்தைகள் இல்லாமல் இருந்தனர். இதனையடுத்து ஓசூரில் உள்ள விஜய் மருத்துவமனையில் தம்பதியினர் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் தற்போது சோபியாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. வீட்டில் முதல் குழந்தையாக மகாலட்சுமி பிறந்ததாக கூறி மகிழ்ச்சி அடைந்த அவரது கணவர் கார்த்திக் சீனிவாசன், மற்றும் அவரது உறவிற்கு பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் இதனையடுத்து அவர்கள் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அங்கு கூடி இருந்த பொதுமக்கள் என சுமார் 300-க்கும் அதிகமானோருக்கு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த மருத்துவமனை மருத்துவர் ரேகா ராஜேஷ் அவர்களுக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் தம்பதியினர் நன்றிகளை தெரிவித்தனர். மருத்துவமனை முன்பு நடந்த இந்த நிகழ்ச்சியில் கார்த்திக் சீனிவாசன் சோபியா ஆகியோரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தம்பதியினருக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் விஜயபாஸ்கர், முரசு நாடு முருகன் அறக்கட்டளை சபரீசன், சோபன் சித்தாணி கோகுல் பிரகாஷ், சித்தாணி, ஸ்ரீதர் ரமணன் விஜய் மருத்துவமனை மருத்துவர் ரேகா ராஜேஷ் மற்றும் மருத்துவ ஊழியர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி