ஓசூரில் பல இடங்களில் மாநகராட்சி மேயர் திடீர் ஆய்வு

83பார்த்தது
ஒசூர் மாநகராட்சிக்குட்பட்ட ராம் நகர் பூங்கா, காமராஜ் காலனியில் உள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி விளையாட்டு மைதானம் மற்றும் அறிவுசார் நூலக கட்டிடம் ஆகிய இடங்களில் வணக்கத்திற்குரிய ஒசூர் மாநகர மேயர் எஸ். ஏ. சத்யா அவர்கள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களை மக்கள் நடமாடும் முக்கிய பகுதிகளை தூய்மையாக வைத்திருந்து சிறப்பான முறையில் பராமரிக்க அறிவுறுத்தினார். ஒசூர் அறிவுசார் மையத்தில் படித்துக் கொண்டிருந்த இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் தேவையான புத்தகங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு நடத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவதற்கான புத்தகங்கள் கிடைக்கின்றதா என்பதையும் அறிந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி பொறியாளர் ராஜாராம் உதவி பொறியாளர் வெங்கட்ராமன் மாமன்ற உறுப்பினர்கள் வரலட்சுமி நரேஷ், மோசின் தாஜ் நிசார், நாகராஜ், பகுதி செயலாளர் ராமு, மற்றும் கழக நிர்வாகிகள் குமார், மஞ்சுநாத், மணி, செல்வம், சங்கர், ராமு, சாமி மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி