டூவீலர் மீது கார் மோதி பானிபூரி வியாபாரி பலி

558பார்த்தது
டூவீலர் மீது கார் மோதி பானிபூரி வியாபாரி பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த கே. எட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவம் அன்று மாலை தனது டூவீலரில் கே. எட்டிப்பட்டி சந்திப்பு சாலையில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்த அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி