கூடங்குளம் அனு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

82பார்த்தது
கூடங்குளம் அனு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்
நெல்லை கூடங்குளத்தில் 2வது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த மே மாதம் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அந்த பணிகள் நிறைவு பெற்று நேற்று முன்தினம் மின் உற்பத்தி தொடங்கியது. இந்நிலையில், மின் உற்பத்தி தொடங்கப்பட்ட சில மணி நேரத்தில் வால்வு பகுதியில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பழுது நீக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி