கள்ளக்காதல்.. மாமியாரை கழுத்தில் குத்திய மருமகன்!

11830பார்த்தது
கள்ளக்காதல்.. மாமியாரை கழுத்தில் குத்திய மருமகன்!
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த லதா (40) என்பவரின் மகள் சவுமியாவுக்கும் (22), விவேக் (32) என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்குள் நடந்த பிரச்சனையால் கோவித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சவுமியா வந்துள்ளார். வந்த இடத்தில் அவருக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த லதா அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். பின்னர் விவேக்கிற்கு இதுகுறித்து தெரியவரவும் நியாயம் கேட்க வந்துள்ளார். ஆனால் சவுமியா கள்ளக்காதலனுடன் ஊர் சுற்ற சென்றதை அறிந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லதாவின் கழுத்தில் குத்தி கொலை செத்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் விவேக்கை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி