காதல் ஜோடியிடம் கத்தி முனையில் கொள்ளை

21753பார்த்தது
காதல் ஜோடியிடம் கத்தி முனையில் கொள்ளை
திருநெல்வேலி வள்ளியூர் முருகன் கோயிலில் நேற்று காதல் ஜோடி ஒன்று சாமி தரிசனம் செய்துவிட்டு கோயில் அருகே உள்ள இடத்தில் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர், அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி, செல்போன், பணம், நகை உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றனர். இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்த நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட வள்ளியூரைச் சேர்ந்த கலையரசன், குட்டி, கண்ணன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி