பிரதமர் மோடியை சந்தித்த கேரள முதலமைச்சர்

53பார்த்தது
பிரதமர் மோடியை சந்தித்த கேரள முதலமைச்சர்
டெல்லி சென்றுள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பிரதமர் மோடியை சந்தித்து வயநாட்டில் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்குமாறும், முதற்கட்டமாக ரூ. 900 கோடியை விடுவிக்குமாறும் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.‌ வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி கேரள அரசு மத்திய அரசை வலியுறுத்தி இருந்த நிலையில், தற்போது இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி