டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தனது கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் தனக்கு அமலாக்கத்துறை காவல் விதிக்கப்பட்டதற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்துள்ளார். கைதான கெஜ்ரிவால் தற்போது அமலாக்கத்துறை காவலில் உள்ளார். 7 நாள் காவலில் எடுத்து அவரை விசாரிக்க நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.