கொழுந்தியாளை பலாத்காரம் செய்த நபர்

1560பார்த்தது
கொழுந்தியாளை பலாத்காரம் செய்த நபர்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகேயுள்ள பெரியசோரகை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (30). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண்ணை, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி, காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து தனது மனைவியை நகை பணம் கேட்டு அடித்து உதைத்துள்ளார். இந்நிலையில் தனது அக்காவை பார்க்க அப்பெண்ணின் சகோதரி சென்றுள்ளார். அப்போது அவரை சுரேஷ்குமார் பலவந்தமாக பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்துள்ளார். மேலும் கூப்பிடும்போதெல்லாம் உல்லாசமாக இருக்க வர வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து மனைவியின் தங்கையை திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறியுள்ளார். பின்னர் அக்கா தங்கை கொடுத்த புகாரின் பேரில் சுரேஷ்குமாரை பிடித்த போலீஸ் விசாரித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி