ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இசை நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. மாஸ்கோவின் கிராக்கஸ் சிட்டி ஹால் அரங்கில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி அரங்கத்துக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த பார்வையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும், வெடிகுண்டுகளையும் வீசிச் சென்றனர். இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 93 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. இந்த பயங்கர தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.