காவலர் தாக்கியதில் உயிரிழந்த ஓட்டுநர்

1082பார்த்தது
காவலர் தாக்கியதில் உயிரிழந்த ஓட்டுநர்
சென்னை மதுரவாயல் அருகே காவலர்கள் தாக்கியதால் கார் ஓட்டுநர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தலைமை காவலர் ரிஷ்வானை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று முன் தினம் இரவு கால் டாக்சி ஓட்டுநர் ராஜ்குமார் பெண் ஒருவருடன் நின்று பேசியுள்ளார். அப்போது அங்கு வந்த மதுரவாயல் காவல்நிலைய தலைமை காவலர் ரிஷ்வான் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் காவலர் அந்த நபரை மார்பில் குத்தியுள்ளார். அப்போது மயங்கி விழுந்த நபரை தகவல் அறிந்து வந்த போலீசார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி