கரூர் மாவட்டம் செங்குந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் வடிவேல் (54). இவர் பாதிரிப்பட்டி டாஸ்மாக் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த தோகைமலை போலீசார் மது விற்ற வடிவேல் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.