கூடுதலாக ரூ. 5 கேட்டதால் அடிதடி - சிசிடிவி வீடியோ

1099பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கொசூரில் கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன்கள் சரவணன், சிவக்குமார் ஆகியோர் பேக்கரி கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு கோட்டை கரையான் பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் அங்கு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்க வந்துள்ளார். பாதாம் கீர் வாங்கி குடித்துவிட்டு பில் செலுத்தும்போது பாதாம் கீர் விலை 30 ரூபாய் என பேக்கரி உரிமையாளர் கூறியுள்ளார்.

பாதாம்கீரின் விலை 25 ரூபாய் தானே பாட்டிலில் போட்டுள்ளது கேட்டபோது ஃப்ரிட்ஜில் வைத்து கூலிங் ஆக தருவதற்கு கூடுதலாக 5 ரூபாய் எனக் கூறியுள்ளார். ஆனால் வேல்முருகன் பாதாம் கீர் கூலிங் குறைவாகவே இருந்தது இதற்கு ஏன் ஐந்து ரூபாய் கூடுதலாக கேட்கிறீர்கள் என வாக்குவாதம் செய்துள்ளார். இதனை அடுத்து பணத்தை செலுத்தி விட்டு அங்கிருந்து வெளியேறியவர் தனது ஊரைச் சேர்ந்த நண்பர்களிடம் இது குறித்து கூறியுள்ளார்.

இதனை அடுத்து வேல்முருகன் கோட்டை கரையான் பட்டியை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் பேக்கரி கடையில் புகுந்து கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன்கள் சரவணன் மற்றும் சிவக்குமார் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது. இதுகுறித்து சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி