35-ஆம் ஆண்டு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்

588பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டுமருதூரில் மகா மாரியம்மன் கோவிலில் 35-ஆம் ஆண்டு பால்குடவிழா இன்று நடைபெற்றது. சித்திரை திருநாளை முன்னிட்டு அந்த ஊரைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மருதூர் காவிரி ஆற்றில் புனித நீராடிவிட்டு அங்கிருந்து நையாண்டி மேளம், வாணவேடிக்கை முழங்க பக்தர்கள் பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து செல்லாண்டியம்மன், மகாமாரியம்மன், மகாகாளியம்மன் ஆகிய கோவில்களில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்தனர். இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி