கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாகனூர் ஊராட்சி வத்தப்பிள்ளையூர் கணபதி களம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாவின் மகன் மகேந்திரன் 24. இவர் தனது பைக்கில் இன்று காலை வத்தபிள்ளையூர் சாலையில் வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே தங்கராசு என்பவர் ஓட்டி வந்த லாரி மோதியதில் மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மகேந்திரன் தந்தை அண்ணாவி அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.