ரேஷன் அட்டை வழங்காமல் அலைக்கழிப்பு முதியவர் அவதி

65பார்த்தது
கரூர் வெங்கமேடு பகுதியில் வசித்து வரும் பெரியசாமி வயது 70 என்பவருக்கு இரண்டு சிறுநீரகங்கள் செயலிழந்ததன் காரணமாக, டயாலிசிஸ் எனும் ரத்த சுத்திகரிப்பு செய்ய , வாரத்தில் இரு முறை மேற்கொண்டு வருகிறார்.

இதனால் வாரம் ஒன்றுக்கு ₹ 12000 மருத்துவ செலவாகி வருகிறது 1969 ஆம் ஆண்டில் அந்தமான் தீவுக்கு சென்ற பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் தற்பொழுது தமிழகம் திரும்பி சொந்த ஊரான, கரூர் அருகே உள்ள செய்யப்பகவுண்டன்புதூர் திரும்பி உள்ளார்.

அதன் பிறகு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவர் தமிழகத்தில் காப்பீட்டு அட்டை பெற ரேஷன் அட்டை கோரி விண்ணப்பித்துள்ளார்.

பல மாதங்கள் ஆகியும் இதுவரை குடும்ப அட்டையை வழங்க வட்ட வழங்கல் துறை நடவடிக்கை மேற்கொள்ளாததால், தினந்தோறும் உயிருக்கு போராடி வருவதாக வேதனையுடன் தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர், கரூர் மாவட்ட ஆட்சியர், மண்மங்கலம் வட்டாட்சியர் ஆகியோருக்கு மனுக்கள் அளித்தும், இதுவரை எவ்வித பயனும் இல்லை.

தமிழகத்தில் தனக்கு, ஓட்டுரிமை, ஆதார் உள்ளிட்ட அனைத்து ஆவணங்கள் இருந்தும் குடும்ப அட்டை இல்லாததால், அரசின் உதவியுடன் மருத்துவ சிகிச்சை பெற தவித்து வருவதால், தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, கரூர் வையாபுரி நகரில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே பேட்டியில் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி