பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை; கணவர் தற்கொலை

1578பார்த்தது
கரூர் மாவட்டம், புகலூர், கருப்பண்ண பிள்ளை தெருவை சேர்ந்தவர் சந்திரன் வயது 59. இவரது மனைவி நாகலட்சுமி வயது 59. பல வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவர் இருவருக்கும் திருமணம் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால், அடிக்கடி இது தொடர்பாக இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்படுவது வழக்கம்.

இதனால், விரக்தி அடைந்த மனநிலையில் வாழ்ந்து வந்த சந்திரன், ஏப்ரல் 20 ஆம் தேதி மாலை 3 மணி அளவில், வேலாயுதம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சந்திரன். இந்த சம்பவம் அறிந்த அவரது மனைவி நாகலட்சுமி, இது தொடர்பாக வேலாயுதம்பாளையம் காவல்துறையினருக்கு புகார் அளித்தார்.

அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த சந்திரனின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி