சத்தீஸ்கர் பஸ்தார் மாவட்டத்தில், ஜக்தல்பூர் தலைமையகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 30 வீரர்கள் திரும்பிக் கொண்டிருந்த போது, பேருந்து கவிழ்ந்ததில் 10 வீரர்கள் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கோடேனார் பி.எஸ் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பயணம் செய்த 10 வீரர்கள் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திமிரபால் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.