அகிம்சை மற்றும் இரக்கத்தின் வடிவம் மகாவீரர்

78பார்த்தது
அகிம்சை மற்றும் இரக்கத்தின் வடிவம் மகாவீரர்
மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில், மகாவீர் ஜெயந்தி அகிம்சை மற்றும் இரக்கத்தின் வடிவமான பகவான் மகாவீரரின் பிறந்த நாளைக் குறிக்கிறது. இந்த பண்டிகை நமக்கு அன்பு மற்றும் அமைதியின் செய்தியை வழங்குகிறது. அவரது போதனைகள் எப்போதும் மனித குலத்தின் நலனுக்கு பொருத்தமானதாக இருக்கும். இந்த நன்னாளில், சமூகத்தில் அன்பையும் நல்லிணக்கத்தையும் பரப்பவும், நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றவும் உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி