டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். இளைஞர் படுகாயம். வழக்கு பதிவு.

1020பார்த்தது
டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். இளைஞர் படுகாயம். வழக்கு பதிவு.
டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். இளைஞர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.

கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, அதியமான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் மணிகண்டன் வயது 26. இவர் ஏப்ரல் 20 ஆம் தேதி மதியம் 3 மணி அளவில், அவருக்கு சொந்தமான டூவீலரில் புன்னம் சத்திரத்தில் இருந்து வேலாயுதம் பாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

இவரது வாகனம் பொன்னியா கவுண்டனூர் அருகே உள்ள தில்லைநகர் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில் வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வடிவேல் மகன் கோபி கிருஷ்ணன் வயது 23 என்பவர் மற்றொரு டூவீலரில் வேகமாக வந்து, மணிகண்டன் ஓட்டிய டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மணிகண்டனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த மணிகண்டனின் சகோதரி சாந்தி வயது 36 என்பவர், அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, கோபி கிருஷ்ணன் டூவீலரை அஜாக்கிரதையாகவும், வேகமாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்தி விட்டார் என தெரிய வந்தது.

எனவே கோபி கிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி