குமாரன்டவலசு அருகே டூவீலர்கள் மோதல். இருவர் படுகாயம்.

62பார்த்தது
குமாரன்டவலசு அருகே டூவீலர்கள் மோதல். இருவர்
படுகாயம்.


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, புது தெருவை சேர்ந்தவர் சுந்தரம் வயது 65.

இவர் ஜூலை 13ஆம் தேதி இரவு 7: 15 மணியளவில், பள்ளப்பட்டியில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.

இவரது வாகனம் குமாரன்டவலசு அருகே சென்றபோது, அதே சாலையில் அதே பகுதியைச் சேர்ந்த மதிவாணன் என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், சுந்தரம் ஓட்டிச் சென்ற டூ வீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வாகனத்துடன் இருவரும் கீழே விழுந்ததில், இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த சுந்தரத்தின் மகன் செந்தில்குமார் வயது 42 என்பவர் அளித்தார் புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய மதிவாணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.

தொடர்புடைய செய்தி