பால்வார்பட்டியில் டூ வீலர்- சரக்கு வேன் நேருக்கு நேர் மோதல்.

77பார்த்தது
பால்வார்பட்டியில் டூ வீலர் சரக்கு வேன் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.

கரூர் மாவட்டம், தென்னிலை தெற்கு, மீனாட்சி வலசு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து வயது 62.

இவர் மார்ச் 20 ஆம் தேதி இரவு 8: 50 மணியளவில், கரூர்- கோவை சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.

இவரது வாகனம் தென்னிலை பால்வார்பட்டி பிரிவு அருகே சென்றபோது,

எதிர் திசையில் திருப்பூர் மாவட்டம், செட்டிபாளையம் பேங்க் காலனி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி வயது 69 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கொரியர் வேன், மாரிமுத்து ஓட்டி வந்த டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.


இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த மாரிமுத்துவை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த மாரிமுத்துவின் மகன் பாஸ்கர் வயது 29 என்பவர் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சரக்கு வேனை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பாலசுப்பிரமணி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல் துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி