டூவீலர்மீது ஆம்னிவேன் நேருக்கு நேர் மோதல். இளைஞர் படுகாயம்.

82பார்த்தது
டூவீலர் மீது ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதல். இளைஞர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.

திருச்சி மாவட்டம், அய்த்தாம்பட்டி, மணலி, வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் விஜய் வயது 23.

இவர் ஏப்ரல் 24ம் தேதி காலை 10: 45- மணியளவில், கோவையிலிருந்து கரூர் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.

இவரது வாகனம் கரூர் மாவட்டம்,
க. பரமத்தி பகுதியில் செயல்படும் ஹெல்த் சென்டர் முன்பு செல்லும்போது, எதிர் திசையில் கரூர் மாவட்டம், செல்லாண்டிபட்டி, வெள்ளியணை வடக்கு, ராசா கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த அருள் பிரசாத் வயது 30 என்பவர் வேகமாக ஓட்டி வந்த ஆம்னி வேன், விஜய் ஓட்டி வந்த டூ வீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த விஜய்க்கு, வலது, இடது கை முட்டி, இடது முழங்கால் முட்டி ஆகிய பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி, சமயபுரம் பகுதியில் செயல்படும் சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த விஜயின் தந்தை செல்வராஜ் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக ஆம்னி வேனை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய அருண்பிரசாத் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்
க. பரமத்தி காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி