அழியாத மை! 8 ஆண்டுகளாக வாக்களிக்க முடியாமல் தவிப்பு

61பார்த்தது
அழியாத மை! 8 ஆண்டுகளாக வாக்களிக்க முடியாமல் தவிப்பு
நாட்டில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வாக்களிக்க ஆர்வமுள்ள பலரால் பல்வேறு காரணங்களால் ஓட்டு போட முடியாமல் போகிறது. அப்படி, கேரள பெண்ணான உஷாவால் நேற்று நடந்த தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை. 2016 தேர்தலில் அவர் ஓட்டு போட்ட போது இடது கை ஆள்காட்டி விரலில் தடவப்பட்ட மை இன்னும் மறையவில்லை. இதை காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் 2019, 2021 தேர்தலில் அவர் வாக்களிக்க செல்லவில்லை.

தொடர்புடைய செய்தி