சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது.

83பார்த்தது
சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது.
சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது.

சட்டவிரோதமாக கருஞ்செல்லி பாளையத்தில் பணம் வைத்து சூதாடுவதாக தென்னிலை பெண் காவல் உதவி ஆய்வாளர் பிரியதர்ஷினிக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 28ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில், கருஞ்செல்லி பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது, அப்பகுதியில் உள்ள முள் தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது.



இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட, திருப்பூர் மாவட்டம், மங்கலப்பட்டி, வள்ளியம்மாள் நகரை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி வயது 34, அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் வயது 37, ஆனந்த் வயது 31, கரூர் மாவட்டம், தென்னிலை, அருகே உள்ள வேலாயுதம்பாளையம் ஒண்டியூர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி வயது 35, ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.


பின்னர் அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 300-யும் பறிமுதல் செய்து, நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் தென்னிலை காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி