காவல்நிலையம் முன்பு முற்றுகை போராட்டம்

524பார்த்தது
கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே மாவத்தூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான பொதுப்பணித்துறை குளத்தில் பட்டப் பகலில் சட்டவிரோதமாக செம்மண் திருட்டில் ஈடுபட்ட வாகனத்தை முற்றுகையிட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புகார் கொடுத்தும் காவல்துறையினர் செம்மண் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வாகனத்தை விடுவித்துள்ளனர்.

புகார் கொடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் வாகனத்தை விடுவித்ததால் ஊர் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி