ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தனகிரி பகுதியை சேர்ந்தவர் சத்யா (43). இவருக்கு வெண்ணிலா என்ற மனைவியும் அர்ஷன் (14), பரத் (12) என இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் பக்கத்து கிராமத்தில் மலை மேல் உள்ள தங்களது குலதெய்வம் கோவிலுக்கு குடும்பத்தோடு சென்றுள்ளனர். அப்போது அதீத வெயில் சுட்டெரித்த நிலையில், நடந்து சென்று கொண்டிருந்த அர்ஷன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வெயில் காரணமாக சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.