மூன்று விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

61பார்த்தது
மூன்று விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
நாட்டின் மூன்று முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று(ஏப்ரல் 28) காலை ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், மகாராஷ்டிராவின் நாக்பூர் மற்றும் கோவா விமான நிலையங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து அந்தந்த விமான நிலையங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் எங்கும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.