ரயில்வே பெண் ஊழியரை கத்தியால் குத்திய நபர்கள்

76பார்த்தது
ரயில்வே பெண் ஊழியரை கத்தியால் குத்திய நபர்கள்
மதுரை கூடல் நகர் பகுதியில் சிக்னலுக்காக நின்றிருந்த ரயிலில் ஏறி பெண் கார்டு பணியாளரின் கையை கத்தியால் கிழித்து, கைப்பையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். திண்டுக்கல்லில் இருந்து நெல்லை செல்லும் காலி பெட்டிகள் ரயிலின் கார்டாக இருப்பவர் கேரளாவை சேர்ந்த ராக்கி(28) இவர் தனது கைப் பையில் செல்போன் மற்றும் பணம் வைத்திருந்திருக்கிறார். அவரை கத்தியால் தாக்கி விட்டு மர்ம நபர்கள் திருடி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி