உரூஸ் மைதானம் அருகே நின்ற மூதாட்டி மீது கிரேன் மோதி விபத்து.

82பார்த்தது
உரூஸ் மைதானம் அருகே நின்ற மூதாட்டி மீது கிரேன் மோதி விபத்து.
உரூஸ் மைதானம் அருகே நின்ற மூதாட்டி மீது கிரேன் மோதி விபத்து.


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, பள்ளப்பட்டி சாவாஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் காதர் மனைவி பாத்திமா வயது 78.

இவர் ஏப்ரல் 27ஆம் தேதி மாலை 6 மணி அளவில், பள்ளப்பட்டி உருஷ் மைதானம் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது
TN 57 BA 0252 என்ற எண் கொண்ட கிரேன் டிரைவர், அவரது வாகனத்தை ரிவர்ஸ் எடுக்கும் போது, எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல், வேகமாக ரிவேர்ஸ் எடுத்ததால், அங்கே நின்று கொண்டிருந்த பாத்திமா மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மூதாட்டி பாத்திமாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


இந்த சம்பவம் குறித்து பாத்திமா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தொடர்பாக கிரேன் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி