விஜய் வசந்த் தீவிர வாக்கு சேகரிப்பு

1046பார்த்தது
இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் விஜய் வசந்த் நேற்று காலை விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கக்கூடிய கற்றுவா, பத்து காணி, ஆறு காணி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நமது வெற்றி வேட்பாளர்கள் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் தாரகை கத்பெட் ஆகியோர் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். நேற்று பல்வேறு பகுதிகளுக்கு வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்க சால்வை அணித்தும் மலர்த்துவியும் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த பிரச்சாரத்தின் போது மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பினுலால் சிங், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸ், உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது மலைவாழ் மக்கள் மத்தியில் பேசிய கன்னியாகுமரி நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் விஜய் வசந்த் மத்தியில் மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் பாஜக அரசு விரட்டியடிக்க நீங்கள் அனைவரும் எங்கள் இருவருக்கும் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

தொடர்புடைய செய்தி