படர்ந்தாலுமூடு: சாலை ஓரம் அடையாளம் தெரியாத முதியவர் பிணம்

59பார்த்தது
படர்ந்தாலுமூடு: சாலை ஓரம் அடையாளம் தெரியாத முதியவர் பிணம்
களியக்காவிளையா அருகே படர்ந்தாலுமூடு சந்திப்பு பகுதியில் உள்ள கடை வாரந்தாவில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இன்று (16-ம் தேதி) காலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரூ கேவின் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

பின்னர் முதியவர் உடலை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி