அரசு விடுதியில் தங்கிப் படித்த இன்ஜினியரிங் மாணவி மாயம்

50பார்த்தது
அரசு விடுதியில் தங்கிப் படித்த இன்ஜினியரிங் மாணவி மாயம்
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக அந்த மாணவி அங்குள்ள அரசு விடுதியில் தங்கி இருந்து தனது படிப்பை தொடர்ந்து வருகிறார். மாணவி விடுமுறை தினங்களில்  வீட்டுக்கு வருவது வழக்கம்.

இந்த நிலையில் ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலையில் அவர் வீட்டிற்கு வர வேண்டிய நாளாகும். ஆனால் அவர் வீட்டிற்கு செல்லவில்லை. இதையடுத்து பெற்றோர் உடனடியாக அவரது செல்ஃபோனுக்கு தொடர்பு கொண்டபோது, செல்போனை எடுத்து பேசிய அந்த மாணவி தான் ஒரு வாலிபருடன் செல்வதாகவும் தன்னை தேட வேண்டாம் எனவும் கூறிவிட்டு போனை துண்டித்துள்ளார்.

இதை கேட்ட மாணவியின் பெற்றோர் மீண்டும் தொடர்பு கொண்ட போது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. உடனடியாக இது குறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

மாணவி கடத்தி சென்ற வாலிபர் காதலனா?   மாணவியின் விருப்பத்தின் அடிப்படையில் வாலிபர் கடத்தி சென்றாரா?   அல்லது மிரட்டி செல்போனில் பேச வைத்து கடத்தி சென்றாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி